| 5457. | பவள மாக்கொடி வீசின, பல் மழை துவளும் மின் என,சுற்றிட; சூழ் வரை, திவளும் பொன்பணை மா மரம் சேர்ந்தன, கவள யானையின்ஓடையின் காந்தவே. |
வீசின பவளமாக்கொடி - அனுமனால் வீசி எறியப்பட்ட பவளம் போன்று சிவந்த கொடிகள்; பல் மழை துவளும் மின் என - பல மேகங்களில் துவண்டு தோன்றும் மின்னல்கள் போல; சூழ் வரை சுற்றிட - இலங்கையைச் சூழ்ந்திருந்த மலைகளில் சுற்றிக் கொள்ள; சேர்ந்தன திவளும் பொன் பணை மாமரம் - எறியப்பட்டு மலைகளைச் சேர்ந்தனவான, விளங்குகின்ற பொன் மயமான கிளைகளை உடைய பெரிய மரங்கள்; கவள யானையின் ஓடையின் காந்த - பெரிய உருண்டைகளாகத்தன் உணவை உண்ணும் யானையின் முக படாம் போல ஒளி வீசி விளங்க. மலைகளைச்சுற்றிக் கொடிகள் மேகங்களில் தோன்றும் மின்னலைப் போன்றன. சுற்றி அமைந்த மரங்கள் யானையின் முக படாம் போன்றன. ஓடை - யானையின் முகத்தில் அழகுக்காக மூடப்படும் முகபடாம். (29) |