| 5458. | பறவைஆர்த்து எழும் ஓசையும், பல் மரம் இற எடுத்த இடிக்குரல் ஓசையும், அறவன் ஆர்த்துஎழும் ஓசையும், அண்டத்தின் புற நிலத்தையும்கைம்மிகப் போயதே. |
பறவை ஆர்த்துஎழும் ஒசையும் - (அந்த வேளையில்)பறவைகள் பெருங்கூச்சலிட்டு எழுகின்ற ஓசையும்; பல் மரம் இற எடுத்த இடிக் குரல் ஓசையும் - பலமரங்கள் ஓடிபட அதனால் உண்டான இடியின் ஒலி போன்ற ஓசையும்; அறவன் ஆர்த்து எழும் ஓசையும் - அறத்தின் உருவினனான அனுமன் ஆரவாரித்தலால் உண்டான ஓசையும்; அண்டத்தின் புற நிலத்தினும் கை மிகப் போயது - இவ்வுலக உருண்டையின் வெளி நிலத்தினைக் கடந்து போயிற்று. அறவன் - அனுமன்(அறத்தின் வடிவினன்) (30) |