5463.

நந்தவானத்து நாள் மலர் நாறின,
நந்த, வானத்துநாள் மலர் நாறின;
சிந்து அவ்வானம் திரிந்து உக, செம் மணி
சிந்த, வால்நந்து இரிந்த, திரைக் கடல்.

     நந்த வானத்துநாறின நாள்மலர் - அசோகவனம் என்னும்
பூஞ்சோலையில் மணம் வீசிய அன்று அலர்ந்த மலர்கள்; வானத்து நந்த
மலர் நாள் நாறின -
ஆகாயத்தில் மிகுதியாக விளங்குகின்ற நட்சத்திரங்கள்
போல விளங்கின; சிந்து திரிந்து அவ் வானம் உக - புளிய மரங்கள்
(ஆகாயத்தில்) சுழன்று, (சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட) அந்தக் கடலிலே
விழ; வால் நந்து - வெண்மையான சங்குப் பூச்சிகள்; திரை கடல் -
அலைகளை உடைய கடலில்; செம்மணி சிந்த இரிந்த - (தமது கர்ப்பத்தில்
உள்ள) அழகிய முத்துக்கள் சிந்தும் படி நிலை கெட்டு ஓடின.

     நந்த வானம் எனஇடையில் எழுத்து நீண்டது. காண்டா வனம்.
ஆச்சிராமம் என்பன போல. நாறுதல் - மணத்தல் -(1) விளங்குதல் (2) சிந்து -
புளியமரம்; வானம் - பறித்த குழி.                              (35)