அனுமன் செயலால்உலகெங்கும் ஒளி வீசல் 

5469.

காசு அறுமணியும், பொன்னும், காந்தமும்,
                         கஞல்வது ஆய
மாசு அறு மரங்கள்ஆகக் குயிற்றிய மதனச்
                          சோலை,
ஆசைகள்தோறும்,ஐயன் கைகளால் அள்ளி அள்ளி
வீசிய,விளக்கலாலே, விளங்கின உலகம் எல்லாம்.

     காசு அறு மணியும்பொன்னும் - குற்றம் இல்லாதஇரத்தினங்களும்
தங்கமும்; காந்தமும் கஞல்வது ஆய - சூரிய காந்தம், சந்திர காந்தம்
என்னும் கற்களும் (ஆகிய இவற்றால்)
 விளங்குவதான; மாசுஅறு மரங்கள்
ஆகக் -
குற்றமற்ற மரங்களாக; குயிற்றிய - இழைத்து அமைத்த; மதனச்
சோலை -
மன்மதனுக்கு இருப்பிடமான அசோகவனச் சோலை மரங்கள்;
ஆசைகள் தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி வீசிய
விளக்கலாலே -
எல்லாத் திக்குகளிலும் அனுமன் தன் இருகைகளாலும் வாரி
வாரி வீசப்பட்டன வாய் ஒரு பெரிய ஒளியைச் செய்தமையால்; உலகம்
எல்லாம் விளங்கின -
உலகம் முழுவதும் அந்த இருளில் நன்கு விளங்கின.

     சந்திரன்மறைந்த பிறகு, ஏற்பட்ட இருள், வீசப்பட்ட மணி ஒளி மிக்க
மரங்களின் ஒளியால் அகன்றது. உலகு ஒளியுடன் விளங்கியது. ஆசை -
திசை; காம உணர்வு தோன்றுதற்கு ஏற்ப இராவணனால் அமைக்கப்பட்டது
ஆதலின் மதனச் சோலையாயிற்று.                              (41)