விலங்கு மற்றும்பறவைகளின் நிலை 5470. | கதறினவெருவி, உள்ளம் கலங்கின, விலங்கு; கண்கள் குதறின பறவை,வேலை குளித்தன; குளித்திலாத பதறின; பதைத்த;வானில் பறந்தன; பறந்து பார் வீழ்ந்து உதறின, சிறையை;மீள ஒடுக்கின உலந்து போன. |
விலங்கு வெருவிக்கதறின - அசோகவனத்திலிருந்த மிருக இனங்கள் அச்சத்தால் வீறிட்டுக் கத்தின; உள்ளம் கலங்கின - மனக்கலக்கம் அடைந்தன; கண்கள் குதறின - கண்கள் புண்ணாகிப் பொங்கின; பறவை வேலை குளித்தன - அங்கிருந்த பறவை இனங்கள் கடலில் வீழ்ந்து ஆழ்ந்தன; குளித் திலாத பதறின - அவ்வாறு வீழாத பறவைகள்; பதைத்த வானில் பறந்தன - மிகவும் துடித்து, பதறினவாய்; பறந்து பார் வீழ்ந்து சிறையை உதறின - சிறிது தூரம் பறந்து (மேலே பறக்கமுடியாமல்) பூமியில் விழுந்து சிறகுகளை உதறிக் கொண்டன; நீள ஒடுக்கின உலந்து போன - ஒடுக்கிக் கொண்டனவாய் அழிந்து போயின. அனுமன்அசோகவனத்தை அழித்ததால் அங்கிருந்த மிருகங்களும் பறவைகளும் அச்சத்தால் அடைந்த செயல்கள் கூறப்பெற்றன. பறவைகள் சிறகுகளை உதறுவது இறக்குமுன் நிகழ்ந்த சாவுக்கு அறிகுறியாகும். இப்பாடற் செய்திகளை அனுமன் மயேந்திர மலையில் காலை ஊன்றிஎழுந்தபோது நிகழ்ந்த செய்திகளோடு (4758 - 4762; குறிப்பாக 4759) ஒப்பிடுக. (42) |