5479. | பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி, புதிய பால் பொழிவது ஒக்கும் திங்களைநக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன, அம் கைபத்து-இரட்டியான்தன் ஆணையால், அழகு மாணப் பங்கயத்துஒருவன்தானே, பசும் பொனால் படைத்தது அம்மா ! |
நெடு நாள் -பலநாட்கள் (பதினைந்து நாட்கள்); பொங்கு ஒளி ஈட்டி- மேன்மேலும் விஞ்சி வருகின்ற ஒளியை, சம்பாதித்து; புதிய பால் பொழிவது ஒக்கும் திங்களை - புதிய பாலைச் சொரிவது போன்ற (நிலாவை வீசுகின்ற) சந்திரனையும்; நக்குகின்ற இ்ருள் எலாம் வாரித்தின்ன - தீண்டுவதான (களங்கம் எனப்படுகின்ற) இருட்டு முழுவதையும் அள்ளித்தின்னும் பொருட்டு (போக்கும்படி); அம்கை பத்து இரட்டியான் தன் ஆணையால் - அழகிய இருபது கைகளை உடைய இராவணனது கட்டளையினால்; பங்கயத்து ஒருவன் தானே - தாமரை மலர் மீது விளங்கும்பிரம்ம தேவனே; அழகு மான - அழகு பொருந்தும்படி; பசும் பொனால்படைத்தது அம்மா ! - இந்தச் சயித்தம் செய்தது போலும் ! திங்கள் பால்பொழிவது - சந்திரன் நிலா வீசுவது; பால் உவமை ஆகுபெயர். பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டிய திங்கள் - பூர்ண சந்திரன்; முழு நிலவின் களங்கமாகிய இருளைப் போக்குவது மண்டபத்தின் பேரொளி.. (51) |