5487.

தேவர்கள்,பின்னும், 'மன்ன ! அதன் உருச் சுமக்கும்
                            திண்மைப்
பூவலயத்தைஅன்றோ புகழ்வது ! புலவர் போற்றும்
மூவரின் ஒருவன்என்று புகல்கினும், முடிவு இலாத
ஏவம், அக்குரங்கை, ஐய ! காணுதி இன்னே'
                            என்றார்.

     தேவர்கள் -(இராவணன்  இகழ்ந்ததைக் கண்ட) பருவத் தேவர்கள்;
பின்னும் -
மேலும், இராவணனை நோக்கி; மன்ன ! - அரசனே!; அதன்
உருச் சுமக்கும் -
அந்தக் குரங்கின் உடலைத் தாங்கவல்ல; திண்மை -
வலிமை உடைய; பூவலயத்தை அன்றோ
 புகழ்வது - பூமியை அல்லவாபுகழ
வேண்டியது!; அகுரங்கை - அந்தக் குரங்கை; புலவர் போற்றும் -
தேவர்கள் வாழ்த்துகின்ற; மூவரின் ஒருவன் -மும்மூர்த்திகளில் ஒருவனே;
என்று புகல்கினும் - என்று சொல்வதும்; முடிவுஇலாத ஏவம் - முடிவிலாத
குற்றமாகும்; ஐய - ஐயனே!; இன்னே காணுதி -இப்போதே காண்பாய்;
என்றார் - என்று சொன்னார்கள்.

     அக் குரங்கின்வடிவைச் சுமக்கும் திண்மை உடைய பூமி
புகழ்வதற்குரியது. தேவர்கள் வாழ்த்தும் மும்மூர்த்திகளுள் ஒருவன் அனுமன்
என்று கூறினும் குற்றம். புலவர் - தேவர் ஏவம் - குற்றம்.            (59)