அனுமன் பிடித்துவருமாறு கிங்கரரை இராவணன் ஏவுதல் 5490. | புல்லிய முறுவல் தோன்ற, பொறாமையும் சிறிது பொங்க, எல்லை இல்ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி, 'வல்லையின்அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றி, கொல்லலிர்குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்திர்' என்றான். |
புல்லிய முறுவர்தோன்ற பொறாமையும் சிறிது பொங்க - (இராவணன்) அற்பமான சிறுநகை உண்டாகவும், பொறாமையும் சிறிது மேற் கிளம்பவும்; எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி - அளவற்ற வலிமை பெற்ற ஏவலர்கள் எண்ணி்றந்தவர்களை ஏவி அனுப்பி; வானையும் வழியை - ஆகாய வழியையும்; மாற்றி - தடுத்து; குரங்கை - அந்தக் குரங்கை; அகலா வண்ணம் வல்லையில் கொல்லலிர் நொய்தின் பற்றுதிர் கொணர்திர் - தப்பி அப்புறம் செல்லாதபடி, கொல்லாமல் விரைவில்,எளிதாக, பிடித்துக் கொண்டு வாருங்கள்; என்றான் - என்று கூறினான். இராவணன்பொறாமைக்குக் காரணம், அவனது அந்தப்புரக் கடிகா குரங்கால் அழிக்கப்பட்டது , நொய்து - எளிது; மெதுவாக. (2) |