5492.

'நானிலம்அதனில் உண்டு போர்' என நவிலின், அச்
                                   சொல்,
தேனினும்களிப்புச் செய்யும் சிந்தையர், தெரித்தும்
                                   என்னின்,
கானினும்பெரியர்; ஓசை கடலினும் பெரியர்; கீர்த்தி
வானினும்பெரியர்; மேனி மலையினும் பெரியர்
                                   மாதோ !

     நானிலம் அதனில்போர் உண்டு என நவிலின் - இந்நிலவுகில் போர்நிகழும் என்று சொன்ன அளவில்; அச்சொல், தேனினும் களிப்பு
செய்யும்சிந்தையர் -
அந்த வார்த்தை, தேனைவிட மிக்க சுவையை
உண்டாக்கும்மனத்தினர்; தெரித்தும் என்னின் - (அன்னவர் தன்மையை)
அறிவிப்போம்என்றால்; கானினும் பெரியர் - (நெருக்கம் பரப்பு
முதலியவற்றால்) காட்டைவிடப் பெரியவர்; மேனி மலையினும் பெரியர் -
உடல் தோற்றத்தில்மலையை விடப் பெரியவர்கள்.

     அவ்வரக்கரின்பரப்பு முதலியவற்றிற்கு காடு முதலிய உலகப் பெரும்
பொருளே உவமையாகா என்றால், வேறு உவமைப் பொருள்களை எங்கே
தேடுவது என்க. பெரியர் என்ற சொல் பல முறை வந்தது சொற்பொருட்
பின்வருநிலையணி. மாது - ஓ - அசைநிலைகள்                   (4)