5497.

பொன் நின்று கஞலும் தெய்வப் பூணினர்;
                         பொருப்புத் தோளர்;
மின் நின்றபடையும், கண்ணும், வெயில் விரிக்கின்ற
                         மெய்யர்;
'என் ?' என்றார்க்கு, 'என் ? என் ?' என்றார்
                       எய்தியது அறிந்திலாதார்;
முன் நின்றார்முதுகு தீய, பின் நின்றார்
                        முடுகுகின்றார்.

     பொன்நின்றுகஞலும் - அழகு நிலை பெற்று விளங்கும்; தெய்வப்
பூணினர் -
தெய்வத்தன்மையுள்ள அணிகளை உடையவர்; பொருப்புத்
தோளர் -
மலை போன்ற தோள்களை உடையவர்; மின் நின்ற படையும்
கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர் -
ஒளி பொருந்திய
ஆயுதங்களையும் கண்களையும் வெயில் போல ஒளி பரப்பப் பெற்ற
உடல்களையும் உடையவர்; என் என்றார்க்கு - (அவர்கள்) ஏன் போவது
தடைப்படுகின்றது என்று தம் முன் நின்றவர்களைக் கேட்டவர்க்கு; எய்தியது
அறிந்திலாதார் -
அவர்கள் போகமுடியாமல் நெருக்கத்தால் தடையுற்றதை
அறியாதவர்களாகி; முன் நின்றார் முதுகு தீய - தம் முன்னே
நின்றவர்களுடைய முதுகுகள், அவர்களது மூச்சுக் காற்றால் தீப்பட்டன போல
சூடுகொள்ள; என் என் என்றார் முடுகின்றார் - என்ன என்ன என்று
விரைந்து வினவுபவராய் விரைபவரானார்கள்.

     என் என்என்றார்; அடுக்கு விரைவுப் பொருளது.             (9)