5499. | 'பனி உறுசெயலை சிந்தி, வேரமும் பறித்தது, அம்மா ! தனி ஒரு குரங்குபோலாம் ! நன்று நம் தருக்கு !' என்கின்றார் ! 'இனி ஒரு பழிமற்று உண்டோ இதனின் ?' என்று இரைத்துப் பொங்கி, முனிவுறு மனத்தின்தாவி, முந்துற முடுகுகின்றார். |
பனிஉறு செயலைசிந்தி - குளிர்ச்சி பொருந்தியஅசோகவனச் சோலையை அழித்து; வேரமும் பறித்தது - அங்கிருந்த சயித்த மண்டபத்தையும் அடியோடு பெயர்த்து அழித்தது; தனி ஒரு குரங்கு போலாம் - தனியாய் வந்த ஒரு குரங்கு என்றால்; நன்று நம்தருக்கு என்கின்றார் - நம் வலிமை நன்றாயிருந்தது என்று சொல்கின்றவர்களாய்; இதனின் மற்று ஒரு பழி இனி உண்டோ - இதைவிட வேறொரு அவமானம்அரக்கர் குலத்துக்கு இன்னும் உள்ளதோ ?; என்று இரைத்து - என்றுஆரவாரம் செய்து; பொங்கி - கொதித்து; முனிவுறு மனத்தின் தாவி முந்துறமுடுகு கின்றார் - கோபம் கொண்ட மனத்தோடு முற்பட விரைந்து செல்பவரானார்கள். வேரமும்; உம்மை,உயர்வு சிறப்பு. குரங்கு போலாம் என்பது இழிவுப் பொருளில் ஒப்பில் போலியாக வந்தது. (11) |