5500. | எற்றுறு முரசும், வில், நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும், சுற்றுறு கழலும்,சங்கும், தெழி தெழித்து உரப்பும் சொல்லும், உற்று உடன்றுஒன்றாய், ஓங்கி ஒலித்து எழுந்து, ஊழிப் பேர்வில் நல் திரைக்கடல்களோடு மழைகளை, நா அடக்க. |
எற்று உறு முரசும்- தாக்கிஅடிக்கப்படுகின்ற முரசத்தின் ஓசையும்; வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும் - வில்லிலே நாணை ஏற்றிப் பூட்டி (அதனைத் தட்டி) எழுப்பிய ஒலியும்; சுற்றுறு கழலும் - காலில் சுற்றிக் கட்டிய வீரக்கழல்களின் ஒலியும்; சங்கும் - சங்குகளை முழக்கும் ஒலியும்; தெழி தெழித்து உரப்பும் சொல்லும் - இரைச்சலிட்டு அதட்டுகின்ற சொல் முழக்கமும்; உடன்று ஒன்றாய் உற்று ஓங்கி எழுந்து - (ஆகிய ஒலிகளெல்லாம்) மாறுபட்டு பின்பு ஒன்றாகச் சேர்ந்து மிகப் பேரொலியாகக் கிளம்பி; ஊழிப் பேர்வில் - யுகங்கள் முடிந்து மாறுங்காலத்தில்; நல்திரை கடல்களோடு மழைகளை நா அடக்க - பெரிய அலைகளோடு எழும் கடல்களின் கொந்தளிப்போடு, அப்போது உண்டாகும் மழைகளின் ஒலியையும் அடக்கும்படி (மிகுந்து விளங்க). முரசு, கழல்,சங்கு, நாண் என்பவை. தானி ஆகு பெயராய் நின்று, அவற்றினின்று எழுந்த ஒலிகளைக் குறிப்பன. (12) |