5501.

'தெரு இடம்இல்' என்று எண்ணி, வானிடைச்
                           செல்கின்றாரும்,
புருவமும் சிலையும்கோட்டி, புகை உயிர்த்து
                           உயிர்க்கின்றாரும்,
ஒருவரின் ஒருவர்முந்தி, முறை மறுத்து
                          உருக்கின்றாரும்,
'விரிவு இலதுஇலங்கை' என்று, வழி பெறார்
                          விளிக்கின்றாரும்.

     தெரு இடம் இல்என்று எண்ணி - தெருவில் நடப்பதற்குப்
போதுமான இடம் இல்லை என்று கருதி; வானிடைச் செல்கின்றாரும் -
ஆகாய வழியாகச் செல்கின்றவர்களும்; புருவமும்
 சிலையும் கோட்டி -
தம்புருவங்களையும் விற்களையும் வளைத்து; புகை உயிர்த்து
உயிர்க்கின்றாரும் -
(கோபத்தீயால்) புகையை வெளிப்படுத்தி பெருமூச்சு
விடுகின்றவர்களும்; ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும் - ஒருவரை ஒருவர் முன்னிட்டு, முறை தவறியதனால்
(தவறியவர் மீது) கோபம் கொள்கின்றவர்களும்; இலங்கை விரிவு இலது
என்று -
இலங்கைநகர், வீரர்கள் செல்வதற்கு ஏற்ற பரப்பு உடையதன்று என்ற
காரணத்தால்; வழிபெறார் விழிக்கின்றாரும் - தாம் செல்லும் வழியைப்
பெறாதவர்களாய், இன்னது செய்வது என்று அறியாமல் மருண்டு விழித்துக்
கொண்டிருக்கின்றவர்களும்.

     புருவம்கோட்டுதல், சினத்தில் தோன்றும் மெய்ப்பாடு. சிலம் -
அரங்கேற்று காதை. வெகுண்டோன் அவிநயம்.                    (13)