5505.

'வரைகளை இடறுமின்' என்றால், 'மறிகடல்
                        பருகுமின்' என்றால்,
'இரவியை விழவிடும்' என்றால், 'எழு மழை
                        பிழியுமின்' என்றால்,
'அரவினது அரசனை,ஒன்றோ, தரையினோடு
                        அரையுமின்' என்றால்,
'தரையினை எடும்,எடும்' என்றால், ஒருவர் அது
                        அமைதல் சமைந்தார்.

     வரைகளைஇடறுமின் என்றால் - மலைகளை இடறித் தள்ளுங்கள்
என்றாலும்; மறிகடல் பருகுமின் என்றால் - அலை புரளுகின்ற கடல் நீரைக்
குடித்து விடுங்கள் என்றாலும்; இரவியை விழ விடும் என்றால் - சூரியனைக்
கீழே விழும்படி தள்ளிவிடுங்கள் என்றாலும்; எழு மழை பிழியுமின் என்றால்
-
வானத்தில் செல்லுகின்ற மேகத்தைப் பிழிந்து விடுங்கள் என்றாலும்;
அரவினது அரசனை தரையினொடு அரையுமின் என்றால் -
பாம்பரசனாகிய ஆதி சேடனை, தரையோடு சேர்த்து அரைத்து விடுங்கள்
என்றாலும்; தரையினை எடும் எடும் என்றால் - இந்தப் பூமியைப் பெயர்த்துஎடுத்து விடுங்கள் என்றாலும்; ஒருவர் அது அமைதல் சமைந்தார்
ஒன்றோ-
ஒருவரே, அத் தொழிலைச் செய்து முடிக்கத்தக்கவராவர்.
(இவர்கள்வல்லமை) இவ்வளவு மாத்திரமேயோ ? இவர்களது வல்லமை
இத்தோடுஅடங்காது என்றபடி.

     இயற்கையின்இயல்புகளை மாற்றுவதற்கு. அரக்க வீரர்களுள் ஒருவரே
போதும். என்பது கருத்து.                                       (17)