5511. | மழைகளும்,மாறி கடலும், போய் மதம் அற முரசம் அறைந்தார்; முழைகளின்இதழ்கள் திறந்தார்; முது புகை கதுவ முனிந்தார்; பிழை இல படஅரவின் தோள் பிடர் உற, அடி இடுகின்றார்; கழை தொடர்வனம் எரியுண்டாலென, எறி படைஞர் கலந்தார். |
எறி படைஞர் -ஆயுதங்களைவீசத் தொடங்கிய அந்த அரக்கவீரர்கள்; மழைகளும், மறிகடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் - (இடிக்கின்ற) மேகங்களும் (ஒலிக்கின்ற) அலைகள் மடங்குகின்ற கடல்களும் ஒதுங்கி, செருக்கு அற்றுவிடும்படியாக போர் முரசங்களை அடித்து முழக்கினவர்களாய்; முழைகளின் இதழ்கள் திறந்தார் - குகைகள் போல வாயிதழ்களைத் திறந்தவர்களாய்; முது புகைகதுவ முனிந்தார் - மிக்க புகை, கம்மிக் கொள்ளும்படி பெருஞ்சினம் கொண்டவர்களாய்; பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் - குற்ற மற்ற படங்களை உடைய ஆதிசேடனின் தோளும் பிடரும் அழுந்தும்படி நடப்பவர்களாய்; கழை தொடர் வனம், எரி உண்டால்என கலந்தார் - மூங்கில்கள் அடர்ந்த காட்டினை நெருப்புப் பற்றுவது போல,(நாலாபக்கமும் வளைத்துக் கொண்டு) ஒருங்கு திரண்டார்கள். அரவுக்குப் பிழை இன்மையாவது, உலகின் கீழிருந்து அப்பாரத்தைச் சுமத்தலில் பின்வாங்காதிருத்தலாகும். (23) |