5516. | புதைபட இருளின் மிடைந்தார், பொடியிடை நெடிது புரண்டார்; விதைபடும்உயிரர் விழுந்தார்; விளியொடு விழியும் இழந்தார்; கதையொடு முதிரமலைந்தார், கணை பொழி சிலையர் கலந்தார், உதைபட உரனும்நெரிந்தார்; உதறொடு குருதி உமிழ்ந்தார். |
கதையொடு முதிரமலைந்தார் - தண்டாயுதங்களுடன்நன்றாகப் போர்செய்தவர்களும்; கணைபொழி சிலையர் கலந்தார் - அம்புகளைச் சொரிகின்ற விற்களை உடையவர்களும் கூடியவர்களாய்; உதைபட - அனுமனால் உதைபட்டு; உரனும் நெரிந்தார் - தம்மார்பும் நெரியப்பட்டு; உதறொடு குருதி - நடுக்கத்தோடு இரத்தத்தையும்; உமிழ்ந்தார் - வெளியே கக்கினர்; இருளின் மிடைந்தார் - இருளைப் போன்று (கறுத்த வடிவத்துடன்) அங்குக் கூடி நெருங்கிய சில வீரர்கள்; பொடி இடை புதை பட நெடிது புரண்டார் - கீழே கிடந்த புழுதியின் இடையே புதைந்து போக நெடுந் தூரம் புரண்டனர்; விதைபடும் உயிரர் விழுந்தார் - விதைகள் போலச் சிதறிய உயிர்களை உடையவர்களாய் வெற்றுடலாய் விழுந்திட்டார்கள்; விளியொடு விழியும் இழந்தார் - சிலர், வீர ஒலியும் கண்களும் இழந்தவர்களாயினர். (28) |