கலிநிலைத் துறை | 5518. | பற்றித்தாளொடு தோள் பறித்து எறிந்தனன்; பாரின், இற்ற வெஞ் சிறைவெற்புஇனம் ஆம் எனக் கிடந்தார்; கொற்றவாலிடைக் கொடுந் தொழில் அரக்கரை அடங்கச் சுற்றி வீசலின்,பம்பரம் ஆம் எனச் சுழன்றார். |
பற்றித் தாளொடுதோள் பறித்து எறிந்தான் - (அனுமன் சில அரக்கர்களை) பிடித்து, அவர்களது கால்களையும் தோள்களையும் பிய்த்து வீசினான்; வெம்சிறை இற்ற வெற்பு இனம் ஆம் என பாரின் கிடந்தார் - (கால்களும் தோள்களும் அற்ற அரக்கர்கள்) கொடிய இறகுகள் அறுபட்ட மலைக்கூட்டங்கள் போல பூமியில் விழுந்து கிடந்தனர்; கொற்ற வாலிடை அடங்க - வெற்றி பொருந்திய தனது வாலிலே அடக்கியிருக்கச் செய்து; கொடும் தொழில் அரக்கரை சுற்றி வீசலின் - கொடிய செயல்களை உடையசில அரக்கர்களைச் சுழற்றிய வீசியதனால்; பம்பரம் ஆம் என சுழன்றார் -பம்பரம் போலச் சுழன்றார்கள். அனுமன் வால்,கயிறாகவும், அரக்கர்கள் பம்பரங்களாகவும், அனுமன் பம்பரம் விடுவோனாகவும், இங்கு உவமிக்கப் பெற்றுள்ளன. (30) |