கலிநிலைத் துறை

 5518.

பற்றித்தாளொடு தோள் பறித்து எறிந்தனன்; பாரின்,
இற்ற வெஞ் சிறைவெற்புஇனம் ஆம் எனக்
                                 கிடந்தார்; 

கொற்றவாலிடைக் கொடுந் தொழில் அரக்கரை
                                 அடங்கச்
சுற்றி வீசலின்,பம்பரம் ஆம் எனச் சுழன்றார்.

     பற்றித் தாளொடுதோள் பறித்து எறிந்தான் - (அனுமன் சில
அரக்கர்களை) பிடித்து, அவர்களது கால்களையும் தோள்களையும் பிய்த்து
வீசினான்; வெம்சிறை இற்ற வெற்பு இனம் ஆம் என பாரின் கிடந்தார் -
(கால்களும் தோள்களும் அற்ற அரக்கர்கள்) கொடிய இறகுகள் அறுபட்ட
மலைக்கூட்டங்கள் போல பூமியில் விழுந்து கிடந்தனர்; கொற்ற வாலிடை
அடங்க -
வெற்றி பொருந்திய தனது வாலிலே அடக்கியிருக்கச் செய்து;
கொடும் தொழில் அரக்கரை சுற்றி வீசலின் - கொடிய செயல்களை உடையசில அரக்கர்களைச் சுழற்றிய வீசியதனால்; பம்பரம் ஆம் என
சுழன்றார் -
பம்பரம் போலச் சுழன்றார்கள்.

     அனுமன் வால்,கயிறாகவும், அரக்கர்கள் பம்பரங்களாகவும், அனுமன்
பம்பரம் விடுவோனாகவும், இங்கு உவமிக்கப் பெற்றுள்ளன.          (30)