5524. | ஓடிக்கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும் கூடிக் கொன்றனன்சிலவரை; கொடி நெடு மரத்தால் சாடிக்கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித் தேடிக்கொன்றனன் சிலவரை-கறங்கு எனத் திரிவான். |
கறங்கு எனத்திரிவான் - காற்றாடி போன்றுதிரிபவனான அனுமன்; சிலவரை உடல் உடல் தோறும் ஓடிக் கொன்றனன் - சில அரக்கர்களை, ஒவ்வொருவர் இருக்கும் இடத்திலும் ஓடிப் போய், கொன்றான்; சிலவரை கூடி கொன்றனன் - சிலரை, நெருங்கிக் கொன்றான்; சிலவரை கொடி நெடுமரத்தால் சாடிக் கொன்றனன் - சிலரை, கொடிகள் படர்ந்த பெரிய மரத்தினால் அடித்துக் கொன்றான்; பிணந் தொறும் தடவி சிலரைத் தேடித் கொன்றனன் - பிணக்குவியல்களிடையே பதுங்கிக் கிடந்த சிலரை தேடிக் கண்டுபிடித்துக் கொன்றான். (36) |