சம்புமாலியுடன்சென்ற படைகள்

5552.

தன்னுடைத்தானையோடும், தயமுகன், 'தருக'
                               என்று ஏய
மன்னுடைச்சேனையோடும், தாதை வந்து ஈந்த
                                வாளின்
மின்னுடைப்பரவையோடும், வேறுளோர் சிறப்பின்
                                விட்ட
பின்னுடைஅனிகத்தோடும், பெயர்ந்தனன், -
                       பெரும் போர் பெற்றான்.

     பெரும்போர்பெற்றான் - பெரிய போர் செய்யும்பேறுபெற்ற
சம்புமாலி; தன்னுடைத் - தனக்கு உரியதான; தானையோடும் -
சேனையுடனும்; தயமுகன் - பத்து முகங்களை உடைய
 இராவணன்;
தருகஎன்று ஏய - 'அழைத்து வருக' என்று ஏவப்பட்ட; மன்னுடைச்
சேனையோடும் -
மன்னனுக்கே உரிய சேனைகளுடனும்; தாதை வந்து ஈந்த
-
தன் தகப்பன் பிரகஸ்தன் கொண்டு வந்து கொடுத்த; வாளின் முன்னுடைப்
பரவையோடும் -
வாளினால் விளக்கம் பெற்ற சேனைக் கடலுடனும்; வேறு
உளோர் -
மற்றும் உள்ளவர்களான நண்பர்கள்; சிறப்பின் விட்ட -
மிகுதியாக அனுப்பிய; பின்னுடை அனிகத்தோடும் - பின்னே காவலாக
வந்த சேனைகளுடனும்; பெயர்ந்தனன் - சென்றான்.

     பிரகத்தன்,இராவணனுடைய தலைமை அமைச்சன். இவன் மைந்தன்
சம்புமாலி.                                                 (3)