5567.

நின்றனதிசைக்கண் வேழம் நெடுங் களிச் செருக்கு
                                      நீங்க,
தென் திசைநமனும் உள்ளம் துணுக்கென, சிந்தி
                                      வானில்
பொன்றல் இல்மீன்கள் எல்லாம் பூ என உதிர,
                                      பூவும்
குன்றமும்பிளக்க, வேலை துளக்குற, கொட்டினான்
                                     தோள்.

     திசைக்கண்நின்றன வேழம் - எட்டுத் திசைகளிலும்நின்றவையான
திக்கு யானைகள்; நெடும் களிச் செருக்கு நீங்க - (தமது) மதக் களிப்பு
நீங்கவும்; தென் திசை நமனும் - தெற்குத் திக்குப் பாலகனாகிய யமனும்;
துணுக்கு என உள்ளம் சிந்த -
திடுக்கிட்டு மனம் சிதறவும்; வானில்
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர -
ஆகாயத்தி்ல் அழிவு
பெறாத நட்சத்திரங்கள் யாவும் மலர்களைப் போலக் கீழே உதிர்ந்து விழவும்;
பூவும் குன்றமும் பிளக்க -
பூமியும் (அதன் மேலுள்ள) மலைகளும் பிளந்து
போகவும்; வேலை துளக்குற தோள் கொட்டினான் - (அனுமன் தனது)
தோளைத் தட்டினான்.

     பூ - பூமி; மீன்- நட்சத்திரங்கள்.                        (18)