5581.

மல்லொடுமலை மலைத் தோளரை, வளை வாய்ப்
பல்லொடும்,நெடுங் கரப் பகட்டொடும், பருந் தாள்
வில்லொடும், அயிலொடும், விறலொடும், விளிக்கும்
சொல்லொடும், உயிரொடும் நிலத்தொடும்,-
                                துகைத்தான்.

     மல்லொடு மலை -மல்யுத்தத்தில போர் செய்யும்; மலைத் தோளரை
-
மலை போன்ற தோள்களை உடைய வீரர்களை; வாய் வளை பல்லொடும்
-
அவர்களுடைய வாயில் உள்ள வளைந்த பற்களோடும்; நெடும் பகடு
கரமொடும் -
நீண்ட வலிய கைகளோடும்; பரும் தாள் வில்லொடும்
அயிலொடும் -
(அவர்கள் கைகளில் கொண்ட) பருத்த அடியை உடைய
வில்லுகளோடும்,
 வேல்களோடும்; விறலொடும் - வீரத்தோடும்; விளிக்கும்
சொல்லொடும் -
கூவுகின்ற சொற்களோடும்; உயிரொடும் -  அவர்கள்
உயிர்களோடும்; நிலத் தொடும் துகைத்தான் - பூமியோடு பூமியாய் அழுந்த
மிதித்து அழித்தான்.

     பகடு - வலிமை;'பகட்டு மார்பின்' (புற, நா, 88,4)             (32)