5585.

அண்ணல்-அவ் அரியினுக்கு அடியவர் அவன் சீர்
நண்ணுவர் எனும்பொருள் நவை அறத் தெரிப்பான்,
மண்ணினும்,விசும்பினும், மருங்கினும், வலித்தார்
கண்ணினும்,மனத்தினும்,-தனித் தனி கலந்தான்.

     அண்ணல் -பெரியோனாகிய அனுமன்; அவ் அரியினுக்கு அடியவர்
-
அந்தத் திருமாலுக்கு அடியவர்கள்; அவன் சீர் நண்ணுவர் எனும்
பொருள் -
அவனுக்குரிய சிறப்புக்களை அடைவர் என்று கூறப்படும் சாத்திரப்
பொருளை; நவை அறத் தெரிப்பான் - குற்றமில்லாமல் (செவ்வனே)
தெரி்விப்பவனாய்; மண்ணினும் விசும்பினும் மருங்கிலும் - பூமியிலும்
வானத்திலும் பக்கங்களில் உள்ள திக்குகளிலும்; வலித்தார் - வலிமை
கொண்டு போரிட்ட அரக்கர்களுடைய; கண்ணினும் மனத்தினும் -
கண்ணுக்கு எதிரிலும் மனத்திலும்; தனித்தனி கலந்தான் -
ஒவ்வொருவரிடமாகவும் கலந்து விளங்கினான்.                   (36)