5586.

கொடித்தடந் தேரொடும் குரகதக் குழுவை
அடித்து, ஒரு தடக்கையின் நிலத்திடை அரைத்தான்;
இடித்து நின்றுஅதிர் கதத்து, எயிற்று வன்
                                பொருப்பை,
பிடித்து, ஒருதடக் கையி்ன், உயிர் உகப் பிழிந்தான்.

     குரகதக் குழுவை -குதிரைக்கூட்டங்களை; கொடித் தடம்
தேரொடும் -
கொடி கட்டிய பெரிய தேர்களோடும்; ஒரு தடக் கையின்
அடித்து -
ஒரு பெரிய கையால் அடித்து; நிலத்திடை அரைத்தான் -
தரையிலே தேய்த்தான்; கதத்து இடித்து நின்று அதிர் - சினத்தினால்
கர்ச்சித்து நின்று பேரொலி செய்கின்ற; எயிற்றுவன் பொருப்பை -
தந்தங்களை உடைய வலியமலை போன்ற யானைகளை; ஒரு தடக்கையின்
பிடித்து -
மற்றொரு பெரிய கையினால் பிடித்து; உயிர் உகப் பிழிந்தான் -
அவற்றின் உயிர் சிந்தப் பிழிந்து கொன்றான்.

     பொருப்பு; யானை. உவமை ஆகுபெயர். எயிற்று வன் பொருப்பு எனத்
தந்தங்களை உடைய மலை என யானையை உருவகித்தார்.           (37)