5589.

எட்டின விசும்பினை;-எழுப் பட எழுந்த-
முட்டின மலைகளை;முயங்கின திசையை;
ஒட்டின ஒன்றைஒன்று; ஊடு அடித்து உதைந்து
தட்டுமுட்டு ஆடின,தலையொடு-தலைகள்.

     எழுபட எழுந்ததலைகள் - (அனுமன் வீசிய) எழுஎன்னும் ஆயுதம்
பட்டதனால் (உடலை விட்டு வேறாகி) எழுந்தனவான அரக்கர்களின் தலைகள்;
விசும்பினை எட்டின - ஆகாயத்தை அளாவினவும்; மலைகளை முட்டின -
மலைகளின் மீது மோதியனவும்; திசையை முயங்கின - திக்குகளைத்
தழுவியனவும்; ஒன்றை ஒன்று ஒட்டின - ஒன்றோடு ஒன்று சேர்ந்தனவுமாகி;
ஊடு அடித்து உதைந்து - போர்க்களத்தில் அடிபட்டுத் தள்ளப்பட்டு;
தலையொடு தட்டு முட்டு ஆடின - (முன்னமே போர்க்களத்தில்) விழுந்து
கிடந்த) தலைகளோடு தட்டு முட்டுப் பொருள் போல அங்கும் இங்கும் சிதறிக்
கிடந்தன.                                                 (40)