5593.

'நன்றி, நன்று, உன் கருணை !' என்னா, நெருப்பு
                             நக நக்கான்;
'பொன்றுவாரின்ஒருவன் என்றாய் போலும் எனை'
                             என்னா,
வன் திண்சிலையின் வயிரக் காலால், வடித் திண்
                             சுடர் வாளி,
ஒன்று, பத்து,நூறு, நூறாயிரமும், உதைப்பித்தான்.

     உன் கருணை நன்றுநன்று என்னா - (சம்புமாலி அனுமனைநோக்கி)நீ என் மீது காட்டும் இரக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது  என்று சொல்லி;
நெருப்பு நக நக்கான் -
நெருப்புப் பெருகி வரச் சிரித்து; எனைப் பொன்று
வாரின் ஒருவன் என்றாய் போலும் என்னா -
என்னைப்போரில்
இறப்பவருள் ஒருவன் என்று எளிதாக நினைத்தாய்
போலும் என்றுகூறி; வன் திண் சிலையின் வயிரக் காலால் - மிக வலிய
தன் வில்லின்வயிரம் போன்று உறுதியான தண்டினால்; வடிதிண் சுடர்
வாளி -
கூர்மைவாய்ந்த  வலிய ஒளி வீசும் அம்புகளை; ஒன்று பத்து, நூறு
நூறாயிரமும் -
ஒன்றும், பத்தும், நூறும் நூறாயிரமும் என்ற கணக்குப் படி;
உதைப்பித்தான் -(அனுமன் மீது) செலுத்தினான்.

     நன்று நன்று;அடுக்கு இகழ்ச்சிப் பொருளது. நகுதல் - பெருகுதல்
என்னும் கருத்தில் வந்தது. வன் திண்: ஒரு பொருட் பன்மொழி உதைத்தல் -
வலிந்து செலுத்துதல்.                                       (44)