'செய்தி,செய்தி, சிலை கைக் கொண்டால், வெறுங், கை திரிவோரை, நொய்தின்வெல்வது அரிதோ ?' என்னா, முறுவல் உக நக்கான்; ஐயன், அங்கும்இங்கும் காலால் அழியும் மழை என்ன, எய்த எய்த பகழிஎல்லாம், எழுவால் அகல்வித்தான்.
ஐயன் - சிறந்தோனானஅனுமன்; சிலை கைக் கொண்டால் - நீ வில்லைக் கையில் கொண்டால்; வெறும் கை திரி வோரை - ஆயுதம் இன்றி வெறும் கைகளோடு திரிகின்றவர்களை; நொய்தின் வெல்வது அரிதோ என்னா - எளிதில் வெல்வது அரிய செயலாகுமா ? என்று சொல்லி; முறுவல் உக நக்கான் - பற்கள் வெளியில் தோன்றுமாறு சிரித்து; எய்த எய்த பகழி எல்லாம் - சம்பு மாலி மேன் மேலும் தூண்டிய அம்புகள் அனைத்தையும்; காலால் அழியும் மழை என்ன - காற்றினால் சிதறி அழியும் மழைத்தாரைகள் போல; எழுவால் - தன் கையில் கொண்ட எழு என்னும் ஆயுதத்தால்; அங்கும் இங்கும் - எல்லாப் புறங்களிலும்; அகல் வித்தான் - நழுவிச் சிதறிப் போகுமாறு நீக்குவித்தான்.
செய்தி செய்தி;அடுக்கு இகழ்ச்சிப் பொருளது. எய்த. எய்த; அடுக்கு விரைவுப் பொருளது. (45)