சம்பு மாலியைஅனுமன் கொல்லுதல்

5596.

சலித்தான்ஐயன்; கையால், எய்யும் சரத்தை உகச்
                           சாடி,
ஒலித் தார்அமரர் கண்டார் ஆர்ப்ப, தேரினுள் புக்கு,
கலித்தான்சிலையைக் கையால் வாங்கி,
                          கழுத்தினிடை இட்டு
வலித்தான், பகுவாய் மடித்து மலைபோல் தலை
                          மண்ணிடை வீழ.

     ஐயன் சலித்தான்- அனுமன்(தன் கையிலிருந்த எழு அறுத்து
வீழ்த்தப்பட்டதனால்) சிறிது சலிப்படைந்து; கையால் எய்யும் சரத்தை உகச்
சாடி -
(உடனே) சம்புமாலி தன்மீது எய்கின்ற அம்புகளை எல்லாம் தன்
கைகளாலேயே உதிர்ந்து போம்படி
 மோதித்தள்ளி; ஒலித்தார் அமரர்
கண்டார் ஆர்ப்ப -
தழைத்தலை உடைய மாலையை அணிந்த தேவர்கள்
கண்டு ஆரவாரம் செய்ய; தேரினுள் புக்கு - சம்பு மாலியின் தேரினுள்ளே
பாய்ந்து புகுந்து; கலித்தான் சிலையை - வீரவொலி செய்து கொண்டிருந்த
அவனது வில்லை; கையால் வாங்கி பகுவாய் மடித்து - தன் கையால்
எளிதில் பற்றி தன் திறந்த வாயை மடித்துக் கொண்டு; மலைபோல் தலை -
மலை போன்ற அவன் தலை; மண் இடை வீழ - தரையில் விழுமாறு;
கழுத்திடை இட்டு வலித்தான் - அவனது கழுத்திலே மாட்டி இழுத்தான்.

     ஒலித்தல் -தழைத்தல்; 'ஒலி கொண்டு' - ஒலி - தழைத்தல்; 'ஒலி
தெங்கு' (பதிற் - 13) போல.                                  (47)