பரிந்துபுலம்பும் மகளிர் காண, கணவர் பிணம் பற்றி, விரிந்த குருதிப்பேராறு ஈர்த்து மனைகள்தொறும் வீச, இரிந்ததுஇலங்கை; எழுந்தது அழுகை; 'இன்று, இங்கு, இவனாலே சரிந்தது,அரக்கர் வலி' என்று எண்ணி, அறமும் தளிர்த்ததால்.
விரிந்த குருதிபேர் ஆறு - பரந்த இரத்தவெள்ளமாகிய பெரிய ஆறு; பிரிந்து புலம்பும் மகளிர் காண - தம் கணவர் இறந்தமையால் இரங்கிப் புலம்பும் பெண்கள் காணுமாறு; கணவர் பிணம் பற்றி ஈர்த்து மனைகள் தொறும் வீச - அவரவர் கணவர்களுடைய பிணங்களைப் பிடித்து இழுத்து வந்து அவரவர் வீடுகள் தோறும் கொண்டு வந்து வீச; இலங்கை இரிந்தது - (அதைக் கண்ட) இலங்கை நகரம் நிலை குலைந்து அலைந்தது; அழுகை எழுந்தது - அழுகைக் குரல் எங்கும் மேலோங்கியது; இன்று இங்கு இவனாலே - இன்றைய தினம், இந்த இலங்கையில் இந்தக் குரங்கினால்; அரக்கர் வலி சரிந்தது என்று எண்ணி - அரக்கர்களுடைய வலிமை அழிந்தது என்று நினைத்து; அறமும் தளிர்த்தது - அறக்கடவுளும் மனம் களித்தது. (49)