காவல் தேவர்இராவணனிடம் செய்தி கூறுதல்

 5599.

புக்கார் அமரர், பொலந் தார் அரக்கன் பொரு இல்
                           பெருங் கோயில்
விக்காநின்றார்; விளம்பல் ஆற்றார்; வெருவி
                           விம்முவார்;
நக்கான் அரக்கன்; 'நடுங்கல்' என்றான்;
'ஐய ! நமர்
                                எல்லாம்
உக்கார்;சம்புமாலி உலந்தான்; ஒன்றே குரங்கு'
                                என்றார்.

     அமரர் - செய்தி சொல்லவேண்டிய பருவத் தேவர்கள்; பொலம் தார்அரக்கன் பொரு இல் பெருங் கோயில் புக்கார் - பொன்னாலான
மாலைஅணிந்த அரக்கனான இராவணனுடைய ஒப்பற்ற பெரிய
அரண்மனையில்புகுந்து; விளம் பல் ஆற்றார் - செய்தி சொல்வதற்கு
வாயெழாமல்; விக்காநின்றார் - விக்கி விக்கி நின்று; வெருவி விம்முவார்
-
அஞ்சி நடுங்குவாரானார்கள்; அரக்கன் - அது கண்ட இராவணன்;
நக்கான் -
சிரித்து; நடுங்கல் என்றான் - நடுங்காதீர் என்று கூறினான்; ஐய
! -
(பின்புஅவர் இராவணனை நோக்கி) ஐயனே !; நமர் எல்லாம் உக்கார்
-
நம்மவரான அரக்கர் அனைவரும் இறந்தனர்; சம்பு மாலி உலந்தான் -
சம்புமாலியும் இறந்து போனான்; ஒன்றே குரங்கு என்றார் -
(இவ்வளவுக்கும்அங்கு எதிர்த்துப் போர் புரிவது) ஒரே குரங்குதான் என்று
கூறினார்கள்;

      உலந்தான் -இறந்தான்.                                 (50)