காவல் தேவர்இராவணனிடம் செய்தி கூறுதல் 5599. | புக்கார் அமரர், பொலந் தார் அரக்கன் பொரு இல் பெருங் கோயில் விக்காநின்றார்; விளம்பல் ஆற்றார்; வெருவி விம்முவார்; நக்கான் அரக்கன்; 'நடுங்கல்' என்றான்;'ஐய ! நமர் எல்லாம் உக்கார்;சம்புமாலி உலந்தான்; ஒன்றே குரங்கு' என்றார். |
அமரர் - செய்தி சொல்லவேண்டிய பருவத் தேவர்கள்; பொலம் தார்அரக்கன் பொரு இல் பெருங் கோயில் புக்கார் - பொன்னாலான மாலைஅணிந்த அரக்கனான இராவணனுடைய ஒப்பற்ற பெரிய அரண்மனையில்புகுந்து; விளம் பல் ஆற்றார் - செய்தி சொல்வதற்கு வாயெழாமல்; விக்காநின்றார் - விக்கி விக்கி நின்று; வெருவி விம்முவார் - அஞ்சி நடுங்குவாரானார்கள்; அரக்கன் - அது கண்ட இராவணன்; நக்கான் -சிரித்து; நடுங்கல் என்றான் - நடுங்காதீர் என்று கூறினான்; ஐய ! - (பின்புஅவர் இராவணனை நோக்கி) ஐயனே !; நமர் எல்லாம் உக்கார் -நம்மவரான அரக்கர் அனைவரும் இறந்தனர்; சம்பு மாலி உலந்தான் - சம்புமாலியும் இறந்து போனான்; ஒன்றே குரங்கு என்றார் - (இவ்வளவுக்கும்அங்கு எதிர்த்துப் போர் புரிவது) ஒரே குரங்குதான் என்று கூறினார்கள்; உலந்தான் -இறந்தான். (50) |