அனுமனைப் பிடிக்கஇராவணனே எழுந்தபோது படைத்தலைவர்பேசுதல் 5600. | என்னும்அளவின், எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான், உன்ன, உன்ன,உதிரக் குமிழி விழியூடு உமிழ்கின்றான், 'சொன்னகுரங்கை, யானே பிடிப்பென், கடிது தொடர்ந்து' என்றான், அன்னது உணர்ந்தசேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார். |
என்னும் அளவின்- என்றுஅவர்கள் கூறிய அளவில்; எரிந்து வீங்கிஎழுந்த வெகுளியான் - பற்றி யெரிந்து மிகுதியாகக் கிளம்பின சினத்தைஉடைய இராவணன்; உன்ன உன்ன - (அவ்வாறு சம்பு மாலி முதலியஅரக்கர்கள் இறந்த செய்தியை) நினைக்கும் தோறும்; விழியூடு உதிரக் குமிழிஉமிழ்கின்றான் - விழிகளின் வழியே இரத்தக்குமிழிகளைக் கக்கிக்கொண்டு; சொன்ன குரங்கை - நீர் சொன்ன அந்தக் குரங்கை; யானே கடிது - நானே விரைந்து சென்று; தொடர்ந்து பிடிப்பேன் எனறான் - பிடித்து வருவேன் என்று கூறினான்; அன்னது உணர்ந்த சேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார் - அதை உணர்ந்த படைத் தலைவர்களான ஐவர் (இராவணனிடம் பின்வருமாறு) தெரிவிக்கலானார்கள். அறிவித்ததுஅடுத்த படலத்தில் கூறப்படும். சேனைத்தலைவர் ஐவர்;- விரூபாட்சன், யூபாட்சன்,துர்த்தரன்,பிரகசன்,பாசகர்ணன் என வான்மீகம் பெயர் குறிப்பிடுகிறது. (51) |