5617.

வாசவன்வயக் குலிசமும், வருணன் வன் கயிறும்,
ஏசு இல்தென்திசைக்கிழவன்தன் எரி முனை
                                எழுவும்,
ஈசன் வன் தனிச்சூலமும், என்று இவை ஒன்றும்
ஊசி போழ்வதுஓர் வடுச் செயா, நெடும் புயம்
                               உடையார்.

     வாசவன் வயகுலிசமும் - இந்திரனுடைய வெற்றிதரும்
வச்சிராயுதமும்; வருணன் வன் கயிறும் - வருணனுடைய வலிய பாசாயுதமும்;
ஏசு இல் தென் திசைக் கிழவன் தன் எரிமுனை
 எழுவும் - குற்றமற்ற
தெற்குத்திக்குக்குரிய எமனது நெருப்பை முனையில் கொண்ட தண்டாயுதமும்;
ஈசன் வன் தனிச் சூலமும் -
சிவபெருமானது வலிய ஒப்பற்ற சூலாயுதமும்;
என்று இவை ஒன்றும் -
என்று பெருமையாய்ச் சொல்லக் கூடிய இவை
ஒன்றும்; ஊசி போழ்வது ஓர் வடுச் செயா - ஊசி ஊடுருவிச் செல்லக்
கூடிய (மிகச் சிறிய) ஒரு வடுவையேனும் செய்ய மாட்டாத; நெடும் புயம்
உடையார் -
பெரிய தோள்களை உடையவர் (படைத் தலைவர்)       (17)