5618.

சூர்தடிந்தவன் மயிலிடைப் பறித்த வன் தோகை,
பார் பயந்தவன்அன்னத்தின் இறகிடைப் பறித்த
மூரி வெஞ் சிறகு,இடை இட்டுத் தொடுத்தன
                                  முறுக்கி,
வீர சூடிகைநெற்றியின் அயல் இட்டு விசித்தார்.

     சூர் தடிந்தவன் - சூரபதுமனைக் கொன்ற முருகக் கடவுளின்; மயில்
இடைப் பறித்த வன் தோகை -
வாகனமாகிய மயிலின் வாலினிடத்திருந்து
பிய்த்த வலிய இறகுகளையும்; பார்பயந்தவன் அன்னத்தின் இறகிடைப்
பறித்த -
பூமியைப் படைத்த நான்முகனின் வாகனமான அன்னப்
பறவையினது இறகிலிருந்து எடுத்த; மூரி  வெம் சிறகு - வலிய அழகிய
சிறகுகளையும்; இடை இட்டு முறுக்கி தொடுத்தன - நடு நடுவே வைத்து
முறுக்கித் தொடுத்தனவான; வீர சூடிகை - வீரத்துக்கு அறிகுறியான சுட்டியை;
நெற்றியின் அயல் இட்டு விசித்தார் - நெற்றியினிடத்திலே வைத்துக் கட்டிக்கொண்டிருப்பவர்கள்.                               

     வீர சூடிகை - வீரர்கள்அணியும் நெற்றிச் சுட்டி.            (18)