| 5618. | சூர்தடிந்தவன் மயிலிடைப் பறித்த வன் தோகை, பார் பயந்தவன்அன்னத்தின் இறகிடைப் பறித்த மூரி வெஞ் சிறகு,இடை இட்டுத் தொடுத்தன முறுக்கி, வீர சூடிகைநெற்றியின் அயல் இட்டு விசித்தார். |
சூர் தடிந்தவன் - சூரபதுமனைக் கொன்ற முருகக் கடவுளின்; மயில் இடைப் பறித்த வன் தோகை - வாகனமாகிய மயிலின் வாலினிடத்திருந்து பிய்த்த வலிய இறகுகளையும்; பார்பயந்தவன் அன்னத்தின் இறகிடைப் பறித்த - பூமியைப் படைத்த நான்முகனின் வாகனமான அன்னப் பறவையினது இறகிலிருந்து எடுத்த; மூரி வெம் சிறகு - வலிய அழகிய சிறகுகளையும்; இடை இட்டு முறுக்கி தொடுத்தன - நடு நடுவே வைத்து முறுக்கித் தொடுத்தனவான; வீர சூடிகை - வீரத்துக்கு அறிகுறியான சுட்டியை; நெற்றியின் அயல் இட்டு விசித்தார் - நெற்றியினிடத்திலே வைத்துக் கட்டிக்கொண்டிருப்பவர்கள். வீர சூடிகை - வீரர்கள்அணியும் நெற்றிச் சுட்டி. (18) |