கலி விருத்தம் 

5620.

நிதிநெடுங் கிழவனை நெருக்கி, நீள் நகர்ப்
பதியொடும்பெருந் திருப் பறித்த பண்டை நாள்,
'விதி' என,அன்னவன் வெந்நிட்டு ஓடவே,
பொதியொடும்வாரிய பொலன் கொள் பூணினார்.

     நெடு நிதிக்கிழவனை - (பஞ்ச சேனாபதிகள்)பெருஞ்
செல்வத்துக்குரியவனான குபேரனை; நெருக்கி - போரில் தாக்கி; நீள் நகர்
பதியொடும் -
நீண்ட நகரமாகிய அளகா புரியொடும்; பெருந் திருப் பறித்த
பண்டை நாள் -
அவன் பெருஞ் செல்வத்தையும் கவர்ந்து கொண்ட
முற்காலத்தில்; அன்னவன் - அந்தக் குபேரன் ! விதி என வெந்நிட்டு
ஓடவே -
'நம்; பண்டை வினை' என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடியவுடன்;
பொதியோடும் வாரிய -
சுமைகளாக வாரிக் கொண்ட; பொலன் கொள்
பூணினார் -
பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை உடையவர்கள். (20)