5622. | 'பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி, நின் கோல் நினைத்திலன்' என, உலகம் கூறலும், நீல் நிறத்துஇராவணன் முனிவு நீக்குவான், காலனை,காலினில், கையில், கட்டினார். |
அந்தணன் பணியன்ஆகி - முதல் அந்தணனாகிய பிரம்ம தேவனது கட்டளையின் படி நடப்பவனாய்; பால் நிறுத்து - (உயிர்களின்) விதியைச் சீர் தூக்கிப் பார்த்து; நின் கோல் நினைத்திலன் - (இலங்கையில் உள்ளவர்க்கும் அவரவர் விதியின்படி ஆயுட் காலத்தை நடப்பிப்பவனாய்) இலங்கை உனது கோலுக்கு உட்பட்டது என்பதை நினைத்தானில்லை; என உலகம் கூறலும் நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான் - என்று உலகம் சொல்லுதலும் (அது கேட்ட) கருநிறத்து இராவணனது கோபத்தைப் போக்கும் பொருட்டு; காலனைக் காலினில் கையில் கட்டினார் - யமனையும்கால்களிலும் கைகளிலும் கட்டிச் சிறையிலே வைத்தவர்கள் (இவர்கள்). காலன் இராவணனதுமேலாண்மையை மதிக்காமல், பிரமன் கட்டளைக்குப் பணிந்தவனாய், ஊழ்வினைப் படியே தன் பணியைச் செய்தவன் அதனால், அந்த யமனுடைய கைகால்களைப் பஞ்சசேனாபதியர் கட்டினார்கள் என்பது கருத்து. பால் - ஊழ். (22) |