அனுமனைக் கண்டஅரக்க வீரரின் ஐயப்பாடு 

5628.

'புன் தலைக் குரங்கு இது போலுமால் அமர்
வென்றது !விண்ணவர் புகழை வேரொடும்
தின்ற வல்அரக்கரைத் திருகித் தின்றதால் !'
என்றனர்,அயிர்த்தனர், நிருதர் எண்ணிலார்.

     எண் இலார்நிருதர் - (அங்கிருந்த)கணக்கில்லாத அரக்கர்கள்; புன்
தலைக் குரங்கு இது போலும் -
இழிவான தலையை உடைய குரங்கு இது
தானோ; அமர் வென்றது - பெரிய போரில் வெற்றி கொண்டது; விண்ணவர்
புகழை வேரொடும் தின்ற வல் அரக்கரை -
தேவர் புகழை அடியோடு
ஒழித்த வலிய அரக்கர்களை; திருகித் தின்றது - முறுக்கித் தின்றது ?;
என்றனர் அயிர்த்தனர் - என்று ஐயம் கொண்டனர்.

     போலும் என்றஒப்பில் போலியும் ஆல் என்ற அசையும் சேர்ந்து
நின்று, நம்ப முடியாமையை உணர்த்தின.                         (28)