அனுமன் பெரியவடிவம் கொள்ளலும், அரக்கர் சினந்து படை வழங்கலும்
 
5629.

ஆயிடை,அனுமனும், அமரர்கோன் நகர்
வாயில்நின்றுஅவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச்
சேயொளித்தோரணத்து உம்பர், சேண் நெடு
மீ உயர்விசும்பையும் கடக்க வீங்கினான்.

     ஆ இடை -அப்பொழுது; அமரர் கோன் நகர் வாயில் நின்று -
தேவர்தலைவனான இந்திரனது தலை நகராகிய அமராவதிப் பட்டணத்தின்
வாசலிலிருந்து; அவ்வழிக் கொணர்ந்து வைத்த - அவ்விடத்து
(அசோகவனம்) கொண்டு வந்து வைக்கப்பட்ட; மா சேய் ஒளித் தோரணத்து
உம்பர் -
மிக்க செந்நிறத்தை உடைய தோரணத்தின் மேலே; சேண் நெடு மீ
உயர் விசும்பையும் -
மிக நெடுந் தூரமாக மேலே உயர்ந்த ஆகாயத்தையும்;
கடக்க வீங்கினான் -
கடந்து செல்லுமாறு உருவத்தைப் பெரிதாக்கினான்;
                                                         (29)