5640.

தாரொடும்,உருளொடும், தடக் கையால் தனி
வீரன் விட்டுஎறிந்தன, கடலின் வீழ்வன,
வாரியின் எழும்சுடர்க் கடவுள் வானவன்
தேரினைநிகர்த்தன, புரவித் தேர்களே.

     தனி வீரன் -ஒப்பற்றவீரனான அனுமன்; தடக்கையால் விட்டு
எறிந்தன -
வலிய தன்கைகளால் வீசி எறியப்பட்டவனவாகி; கடலின்
வீ்ழ்வன -
கடலில் சென்று வீழ்வனவாகிய; தாரொடும் உருளொடும் -
கிண்கிணியோடும் சக்கரத்தோடும் கூடியனவாய்க்; புரவித் தேர்கள் -
குதிரைகள் பூட்டப்பட்ட தேர்கள்; வாரியின் எழும் - கடலில் தோன்றுகின்ற;
சுடர்க்கடவுள் வானவன் தேரினை நிகர்த்தன -
 ஆயிரம் கதிர்களோடு
கூடிய கடவுளாகிய சூரியனுடைய தேர்போல் காணப்பட்டன.

     கடலில் விழுந்ததேர்கள், கடலினின்று தோன்றும் சூரியனது தேரை
ஒத்தன.                                               (40)