தானை அழிந்தபின்சேனைத்தலைவர்
ஐவரும் அனுமனுடன்பொருது வீழ்தல்

5647.

உலந்ததுதானை; உவந்தனர் உம்பர்;
அலந்தலை உற்றது,அவ் ஆழி இலங்கை;
கலந்தது, அழும்குரலின் கடல் ஓதை;
வலம் தருதோளவர் ஐவரும் வந்தார்.

     தானை உலந்தது -சேனைமுழுவதும் அழிந்துவிட்டது; உம்பர்
உவந்தனர் -
(அதுகண்டு) தேவர்கள் மகிழ்வுற்றனர்; அவ் ஆழி இலங்கை
அலம் தலை உற்றது -
கடல் சூழ்ந்த அந்த இலங்கை நகரம் குழப்பம்
அடைந்தது; அழும் குரலின் கடல் ஓதை கலந்தது - இலங்கையிலுள்ளாரது
அழு குரலாகிய கடலோசை எங்கும்
பரவிற்று; வலம் தருதோளவர் ஐவரும்
வந்தார் -
(அப்போது) வலியைத் தரும் தோள்களை உடைய பஞ்ச
சேனாபதிகளும் போர் புரிய எதிர்த்து வந்தனர்.

     சேனைகளின்அழிவுக்குப் பிறகு, படைத்தலைவர் ஐவரும் அனுமனை
எதிர்க்க வந்தனர் என்றவாறு.                                (47)