5655.

ஏய்ந்து எழுதேர் இமிழ் விண்ணினை எல்லாம்
நீந்தியது;
ஓடி நிமிர்ந்தது; வேகம்
ஓய்ந்தது;வீழ்வதன்முன், உயர் பாரில்
பாய்ந்தவன்மேல், உடன் மாருதி பாய்ந்தான்.

     ஏய்ந்து எழு தேர்- (அனுமனால்) எடுத்து எறியப்பட்டு மேல் எழுந்த
தேர்; இமிழ் விண்ணினை எல்லாம் - ஒலிக் குணம் உடைய ஆகாய வெளி
எங்கும்; ஓடி நீந்தியது - விரைந்து கடந்ததாகி; நிமிர்ந்தது வேகம் -
வேகத்தால் மிகுந்தது; ஓய்ந்தது - பின்னர் வேகம் குறைந்து போய்;
வீழ்வதன் முன் -
கீழே விழுவதற்கு முன்னமே; உயர் பாரில் பாய்ந்தவன்
மேல் -
சிறந்த பூமியில் பாய்ந்து குதித்த அவ்வரக்கர் தலைவன் மீது; உடன்
மாருதி பாய்ந்தான் -
உடனே அனுமன் பாய்ந்தான்.

     எறியப்பட்டவேகத்திற்குத் தக்க வேகத்தில் தேர் பறந்தது என்பதை
'ஏய்ந்து எழு தேர்' எனக் குறித்தார்.                           (55)