5656.

மதித்தகளிற்றினில் வாள் அரிஏறு
கதித்ததுபாய்வதுபோல், கதி கொண்டு
குதித்தனன்;மால் வரை மேனி குழம்ப
மிதித்தனன்-வெஞ் சின வீரருள் வீரன்.

     வெம் சினவீரருள் வீரன் - கொடிய சினம் மிக்கவீரர்களுள் பெரு
வீரனாகிய அனுமன்; மதித்த களிற்றினில் - தருக்குற்ற யானையின் மீது;
வாள் அரி ஏறு கதித்தது பாய்வதுபோல - ஒளிதங்கிய ஆண்சிங்கம்
கோபம் கொண்டு பாய்வது போல; கதி கொண்டு குதித்தான் - விரைவாக
அவன்மீது குதித்து; மால் வரை மேனி குழம்ப மிதித்தான் - பெரிய மலை
போன்ற (அந்த அரக்கனுடைய) உடம்பு சிதைந்து இரத்தம் குழம்பும்படி
கால்களால் மிதித்துக் கொன்றான்.

      பஞ்சசேனாபதிகளுள் இரண்டாமவன் கொல்லப்பட்டான்.      (56)