5660. | கால் நிமிர் வெஞ் சிலை கையின் இறுத்தான்; ஆனவர் தூணியும்,வாளும், அறுத்தான்; ஏனைய வெம் படைஇல்லவர், எஞ்சார், வானிடை நின்று,உயர் மல்லின் மலைந்தார். |
கால் நிமிர்வெஞ்சிலை கையின் இறுத்தான் - இருமுனைகளோடு ஓங்கிய கொடிய வில்லை (அனுமன்) தனது இரு கைகளால் ஒடித்து; ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான் - அவர்களுடைய அம்புப் புட்டில்களையும் வாள்களையும் சின்ன பின்னப்படுத்தினான்; ஏனைய வெம்படை இல்லவர் - வேறு, போருக்குரிய ஆயுதம்இல்லாதவரான அரக்கர் இருவரும்; எஞ்சார் - பின் வாங்காதவர்களாய்; வானிடை நின்று - ஆகாயத்திலிருந்து கொண்டே; உயர்மல்லின் மலைந்தார் - சிறந்த மற் போரினால் (அனுமானோடு) பொருதார்கள். கால் -வில்லின் நுனிகளைக் குறிக்கும். 'ஒரு தனு இரு கால் வளைய' என்ற திருவெழுகூற்றிருக்கையில் 'கால்' வில் நுனியைக் குறித்தது காண்க. (திருஞானசம்பந்தர் முதல் திருமுறை). (60) |