5671.

'கொய் தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து
                           உருவு கொண்டு,
கைதவம் கண்ணி,ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும்
                           கற்பான்,
எய்தினன்,இமையா முக்கண் ஈசனே என்ற போதும்,
நொய்தினின்வென்று, பற்றி தருகுவென், நொடியில்
                           நுன்பால்.

     இமையா முக்கண்ஈசனே - இமைத்தல் இல்லாத மூன்று கண்களை
உடைய சிவபிரானே; ஈண்டு - இந்த இலங்கையில்; ஓர்
சிறு பழி
இழைக்கும்கற்பால் -
ஒரு சிறியஅவமதிப்பைச் செய்ய வேண்டும்
என்ற நினைவினால்; கைதவம் கண்ணி - வஞ்சனையைக் கருத்தில் எண்ணி;
கொய் தளிர் கோதும் வாழ்க்கை -
கொய்யும் தளிர்களை மெதுவாகக்
கடித்துத் தின்னும் எளிய வாழ்வை உடைய; கோடரத்து உருவு கொண்டு
எய்தினான் -
அற்பக்குரங்கினது வடிவத்தைக் கொண்டு வந்துள்ளான்; என்ற
போதும் -
என்றாலும்; நொய் தினின் வென்று - (அவனை) எளிதில்
வென்று; நொடியின் பற்றி, நுன் பால் தருகு வென் - வெகு விரைவில்
பிடித்து உன்னிடம் கொணர்ந்து விட்டுவிடுவேன்.                   (4)