5677. | மந்திரக்கிழவர் மைந்தர், மதி நெறி அமைச்சர் மக்கள், தந்திரத்தலைவர் ஈன்ற தனயர்கள், பிறரும், தாதைக்கு அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர், எந்திரத்தேரர், சூழ்ந்தார்-ஈர்-இரண்டு இலக்கம் வீரர். |
மந்திரக்கிழவர் மைந்தர் - மந்திராலோசனைக்குரியோருடைய குமாரர்கள்; மதி நெறி அமைச்சர் மக்கள் - புத்தியில் மிக்க மந்திரிகளுடையமைந்தர்கள்; தந்திரத் தலைவர் ஈன்ற தனயர்கள் - சேனைத்தலைவர்கள்பெற்ற புதல்வர்கள்; தாதைக்கு அந்தரத்து அரம்பை மாரில், தோன்றினர்ஆதி ஆனோர் பிறரும் - தந்தையாகிய இராவணனுக்குத் தேவலோகத்துத்தெய்வமகளிரிடம், பிறந்த புத்திரர் முதலிய பிறரும் ஆகிய; ஈர் இரண்டுஇலக்கம் வீரர் - நான்கு லட்சம் வீரர்கள்; எந்திரத் தேரர் சூழ்ந்தார் - எந்திரமுள்ளதேரின் மீது ஏறியவர்களாய், அக்க குமாரனைச் சூழ்ந்து கொண்டு போருக்குச் சென்றனர். அக்ககுமாரனுடன்சென்ற நான்கு லட்சம் வீரர்களின் வகை கூறப்பட்டது. மந்திரக் கிழவர் முதல்வராகக் கூறியவர் நால்வராதலால், ஒவ்வொருவகையினரின் குமாரரும் ஒவ்வொரு லட்சம் வீரர் என்க. அந்தரம் - மேலுலகம், விண்ணுலகம். (10) |