அக்ககுமாரனைக்கண்டு அனுமன் ஐயுறுதல் 

5685.

'இந்திரசித்தோ ? மற்று அவ் இராவணனேயோ ?'
                           என்னா,
சிந்தையின்உவகை கொண்டு முனிவுற்ற குரக்குச்
                           சீயம்,
'வந்தனன்;முடிந்தது அன்றோ மனக் கருத்து ?'
                           என்ன வாழ்த்தி,
சுந்தரத் தோளைநோக்கி, இராமனைத் தொழுது
                           சொன்னான்;

     முனிவு உற்றகுரக்குச் சீயம் - (அக்ககுமாரன்வரவுகண்டு) பெருங்
கோபம் கொண்டுள்ள குரங்குகளுள் சிங்கம் போன்ற அனுமன்; இந்திர
சித்தோ ? -
(இப்போது போருக்கு வரும் இவன்) இந்திரசித்தோ ?; மற்று
அவ் இராவணனேயோ வந்தனன் என்னா -
அல்லது (நான்
எதிர்பார்த்திருக்கும்) இராவணன் தானோ? போருக்கு வந்துள்ளான் என்று;
சிந்தையின் உவகை கொண்டு -
மனத்தில் மகிழ்ச்சி மேற்கொண்டு; மனக்
கருத்து முடிந்தது அன்றோ -
எனது எண்ணம் நிறைவேறிவிட்டதன்றோ;
என்ன -
என்று சொல்லி; சுந்தரத் தோளை நோக்கி, வாழ்த்தி் - தனது
அழகிய தோள்களைப் பார்த்து (அவற்றுக்கு) வாழ்த்துக் கூறி; இராமனைத்
தொழுது -
இராமபிரானை மனத்தால் நினைத்து வணங்கி விட்டு; சொன்னான்- சொல்லிக் கொண்டான்.

     இராமனைத்தொழுதல் அடிமைச் சிறப்பு. சினம், உவகை இரண்டு
உணர்ச்சிகளும் கொண்ட முரண் ஓவியம்பற்றி எண்ணிப் பார்க்க.       (18)