5686.

'எண்ணியஇருவர்தம்முள் ஒருவனால்; யான் முன்
                           செய்த
புண்ணியம்உளதால்; எம் கோன் தவத்தொடும்
                           பொருந்தினானே;
நண்ணினன் நானும்நின்றேன்; காலனும், நணுகி
                           நின்றான்;
கண்ணிய கருமம்இன்றே முடிக்குவென், கடிதின்'
                           என்றான்.

     எண்ணிய -(நான்இப்போது போருக்கு வருபவராக) நினைத்த;
இருவர்தம்முள் ஒருவனேல் -
இந்திரசித்து, இராவணன் என்ற
இருவர்களுள்ஒருவனாக இருந்தால்; யான் முன் செய்த புண்ணியம் உளது
-
யான்முற்பிறப்பில் செய்த புண்ணியப்பயன் எனக்கு உள்ளது; எம் கோன்
தவத்தொடும் பொருந்தினானே -
எங்கள் தலைவனான சுக்கிரீவனும் செய்த
தவப்பயன் பொருந்தப் பெற்றவனானான்; நானும் நண்ணினன் நின்றேன் -
(பல அரக்கர்களைக் கொன்றிட்ட) நானும் (இவனைக் கொல்வதற்கு) சித்தனாக
நிற்கின்றேன்; காலனும் நணுகி நின்றான் - (இவன் உயிரைக் கொண்டு
போவதற்கு) யமனும் நெருங்கி நிற்கின்றான்; கண்ணியகருமம் இன்றே
கடிதின் முடிக்குவென் -
யான் கருதிய காரியத்தை இன்றைக்கே விரைவில்
முடித்து விடுவேன்; என்றான் - என்று (அனுமன்) தனக்குள் சொல்லிக்
கொண்டான்.                                             (19)