5693.

காய் எரி,முளி புல் கானில் கலந்தென, காற்றின்
                           செம்மல்,
'ஏ' எனும்அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர்
                          எல்லை இ்ல்லை;
போயவர் உயிரும்போகித் தென் புலம் படர்தல்
                           பொய்யாது;
ஆயிர கோடி தூதர்உளர்கொலோ நமனுக்கு
                          அம்மா ?

     காற்றின்செம்மல் காய் எரி - வாயுகுமாரனான அனுமன்பற்றி
எரியும்தன்மையுள்ள நெருப்பானது; முளிபுல் கானில் கலந்தென - உலந்த
புற்களின்தொகுதியில் சேர்ந்தாற்போல; 'ஏ' எனும் அளவில் - வெகு
விரைவில்;கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை - கொல்லுகின்ற
அரக்கர்களுக்கு ஒரு அளவு இல்லை; போயவர் உயிரும் - போருக்குச்
சென்ற அவ் அரக்கர்களின் உயிர்களும்; தென்புலம் போகி படர்தல்
பொய்யாது -
தென் திசையாகிய யமனுலகு போய்ச் சேருதல் தவறாது;
நமனுக்கு -
(இவ்வாறு இறந்த உயிர்களை எல்லாம் கொண்டு போவதற்கு)
யமனுக்கு; ஆயிரம் கோடி தூதர் உளரோ ? - ஆயிரம் கோடி தூதர்கள்
உள்ளார்களோ?

     'காய் எரி',அனுமனுக்கும், 'முளிபுல் கான்' அரக்கர்களுக்கும்
உவமையாக வந்தன. அம்மா; வியப்பை உணர்ந்தும் இடைச்சொல் கொல் -
ஐயம். ஓ - வினா.                                          (26)