ஒரு கையால்அவன் வயிரத் திண் சிலை உற்றுப்பற்றலும், உரவோனும,் இரு கையால் இவன்வலியாமுன்னம், அது இற்றுஓடியது; இவர் பொன் தோளின், சுரிகையால் அவன்உருவிக் குத்தலும், அதனை,சொல் கொடு வரு தூதன், பொரு கையால்இடை பிதிர்வித்தான், முறி பொறி ஓடும்படி பறியாவே.
ஒரு கையால் அவன்வயிரத் திண் சிலை உற்றுப் பற்றலும் - (அவ்வாறுஅனுமன் தனது) ஒரு கையினால், அக்ககுமாரனது உறுதியான வலிய வில்லை நெருங்கிப் பிடுங்கிக் கொண்டதும்; உரவோனும் - வலியவனான அக்ககுமாரனும்; இருகையால் வலியா முன்னம் - தனது இரண்டு கைகளாலும். அந்த வில்லைப் பிடித்து இழுக்கும் முன்னம்; அது இற்று ஓடியது - அவ்வில் முறிந்து போய் விட்டது (பிறகு); அவன் - அந்த அக்ககுமாரன்; இவர் பொன் தோளின் தன் கரிகையால் உருவி குத்தலும் -தன் உடை வாளினால், உயர்ந்த அழகிய (அனுமனது) தோளின் மேல் குத்தியதும்; அதனை - அந்த உடை வாளை; சொல்கொடு வரு தூதன் - (இராமபிரானது) சொல்லைச் சீதாபிராட்டியினிடம் சொல்லுமாறு கொண்டு வந்த தூதனாகிய அனுமன்; பொருகையால் பறியா - தனது போர் புரியும் கையினால் பறித்து; முதிர் பொறி ஓடும்படி இடை பிதிர்வித்தான் - மிக்க நெருப்புப் பொறி எங்கும் பறந்து செல்லும்படி (தன் மேல் படுவதற்கு முன்) நடுவழியிலேயே பொடியாக உதிரும்படிச் செய்தான். (35)