5702.

ஒரு கையால்அவன் வயிரத் திண் சிலை
     உற்றுப்பற்றலும், உரவோனும,்
இரு கையால் இவன்வலியாமுன்னம், அது
     இற்றுஓடியது; இவர் பொன் தோளின்,
சுரிகையால் அவன்உருவிக் குத்தலும்,
     அதனை,சொல் கொடு வரு தூதன்,
பொரு கையால்இடை பிதிர்வித்தான், முறி
     பொறி ஓடும்படி பறியாவே.

     ஒரு கையால் அவன்வயிரத் திண் சிலை உற்றுப் பற்றலும் -
(அவ்வாறுஅனுமன் தனது) ஒரு கையினால், அக்ககுமாரனது உறுதியான
வலிய வில்லை நெருங்கிப் பிடுங்கிக் கொண்டதும்; உரவோனும் -
வலியவனான அக்ககுமாரனும்; இருகையால் வலியா முன்னம் - தனது
இரண்டு கைகளாலும். அந்த வில்லைப் பிடித்து இழுக்கும் முன்னம்; அது
இற்று ஓடியது -
அவ்வில் முறிந்து போய் விட்டது (பிறகு); அவன் - அந்த
அக்ககுமாரன்; இவர் பொன் தோளின் தன் கரிகையால் உருவி குத்தலும் -தன் உடை வாளினால், உயர்ந்த அழகிய (அனுமனது) தோளின் மேல்
குத்தியதும்; அதனை - அந்த உடை வாளை; சொல்கொடு வரு தூதன் -
(இராமபிரானது) சொல்லைச் சீதாபிராட்டியினிடம் சொல்லுமாறு கொண்டு வந்த
தூதனாகிய அனுமன்; பொருகையால் பறியா - தனது போர் புரியும்
கையினால் பறித்து; முதிர் பொறி ஓடும்படி இடை பிதிர்வித்தான் - மிக்க
நெருப்புப் பொறி எங்கும் பறந்து செல்லும்படி (தன் மேல் படுவதற்கு முன்)
நடுவழியிலேயே பொடியாக உதிரும்படிச் செய்தான்.                (35)