| 5713. | தீட்டுவாள் அனைய கண் தெரிவை, ஓர் திரு அனாள், ஆட்டில்நின்றுஅயர்வது ஓர் அறு தலைக் குறையினைக் கூட்டி, 'நின்ஆர் உயிர்த் துணைவன், எம் கோனை, நீ, காட்டுவாயாதி'என்று, அழுது கை கூப்பினாள். |
தீட்டுவாள் அனையகண் - தீட்டப் பெற்ற வாள் போன்ற கண்களை உடைய; திரு அனாள் ஓர் தெரிவை - இலக்குமி போன்ற ஒரு அரக்கி; ஆட்டில் நின்று அயர்வது ஓர் அறு தலைக் குறையினைக் கூட்டி - கூத்தாடும் தொழிலில் இருந்து சோர்வதான தலையற்றதோர் உடலை (கவந்தத்தை) தலையோடு சேர்த்து,; (அதனை நோக்கி) 'நின் ஆர் உயிர்த் துணைவன் - 'உனது ஒப்பற்ற உயிர்த் துணைவனாகிய; எம் கோவினை - எமது தலைவனை; நீ காட்டுவாய் ஆதி' என்று - நீ எனக்குக் காட்டுவாயாக' என்று சொல்லி; அழுது கை கூப்பினாள் - அழுதவளாய்த்தனது கைகளைக்குவித்து வணங்கினாள். வீரம் மிடைந்தஅவல ஓவியமாகக் கணவனைத் தேடும் அரக்கி சித்தரிக்கப்பட்டுள்ளது அருமை. (46) |