5721.

தம்பியைஉன்னும்தோறும், தாரை நீர் ததும்பும்
                         கண்ணான்,
வம்பு இயல்சிலையை நோக்கி, வாய் மடித்து உருத்து
                         நக்கான்;
'கொம்பு இயல்மாய வாழ்க்கைக் குரங்கினால்,
                         குரங்கா ஆற்றல்
எம்பியோதேய்த்தான் ? எந்தை புகழ் அன்றோ
                        தேய்ந்தது ?' என்றான்.

     தம்பியைஉன்னும்தோறும் தாரை நீர்ததும்பும் கண்ணான் -  தனதுதம்பி அக்கன் இறந்ததை நினைக்கும் பொழுதெல்லாம், தாரையாக நீர்
ஒழுகும்கண்களை உடைய மேகநாதன்; வம்பு இயல் சிலையை நோக்கி -
கட்டமைந்த தனது வில்லைப் பார்த்து; வாய் மடித்து உருத்து நக்கான் -
தன் வாயிதழை மடித்துக் கொண்டு, கோபத்துடன் சிரித்தான்; கொம்பு இயல்
மாய வாழ்க்கைக் குரங்கினால் -
மரக் கொம்புகளிலே உலாவுகின்ற
நிலையில்லாத வாழ்வை உடைய இந்த ஒரு குரங்கினால்; குரங்கா ஆற்றல்
எம்பியோ தேய்ந்தான் -
வளையாத வலிமை வாய்ந்த எனது தம்பியோ
அழிந்தான் ?(இல்லை); எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது - எனது
தந்தையாகிய இராவணனுடைய புகழ் அல்லவா மெலிவுற்று அழிந்தது என்று
கூறி வருந்தினான்.

     போருக்குச்செல்லும் மேநாதனின் எண்ணத்தைப் புலப்படுத்தியது.
குரங்கா - வளையாது.                                       (5)