பத்தியில்தேர்கள் செல்ல, பவளக் கால் குடைகள் சுற்ற, முத்தினின்சிவிகைதன்னை முகில் எனத் தேர்கள் சுற்ற, மத்த வெங்கரிகள் எல்லாம் மழை என இருண்டு தோன்ற, தத்தியபரிகள்தன்னின் சாமரை பதைப்ப,- வந்தான்.*
பத்தியில்தேர்கள் செல்ல - வரிசையாக தேர்கள்செல்லவும்; பவளக்கால் குடைகள் சுற்ற - பவளத்தால் ஆகிய கால்களை உடைய குடைகள்சூழ வரவும்; முத்தினின் சிவிகை தன்னை - முத்தாற் செய்யப் பெற்றபல்லக்குகளை; முகில் எனத் தேர்கள் சுற்ற - மேகம் போலக் கரிய மரத்தால் செய்யப்பெற்ற தேர்கள் சுற்றி வரவும்; மத்த வெங் கரிகள் எல்லாம் - மதம் உடைய கொடிய யானைகள் எல்லாம்; மழை என இருண்டு தோன்ற - மழை மேகம் போலக் கரிதாய்க் காட்சி அளிக்கவும்; தத்திய பரிகள் தன்னின் - தவழ்ந்து துள்ளும் குதிரைகளைப் போல; சாமரை பதைப்ப - வெண் கவரிகள் துடிக்க வந்தான். (13)